Gopurapatti
A dipilated Vishnu Temple to be turned-up to a Great vaishnavite Temple
Tuesday, August 23, 2022
நம் கோபுரப்பட்டி திருக்கோயிலில் பந்தற்கால் முகூர்த்தம் 21 ஆகஸ்ட்2022 காலை 07:00 மணி - 07:00 மணி - ஸிம்ஹ லக்னம்
முழு புகைப்படத் தொகுப்பினையும் காண, கீழே காணப்படும் சுட்டியினை சொடுக்கவும்.
https://photos.app.goo.gl/gYp7CPmYMTpfR13e8
Monday, August 15, 2022
ஸ்ரீசுதர்ஸன நரஸிம்ஹர் மூலவர் விக்ரஹம், சிற்ப கூடத்திலிருந்து கோபுரப்பட்டி கோயிலுக்குக் கொண்டு வருதல்
இந்திய சுதந்திர தினமான 15-08-2022, திங்கட்கிழமை, சுதினத்தில், ஒக்கரை சிற்ப கூடத்திலிருந்து, புதிதாக பிரதிட்டை செய்வதற்காக ஸ்ரீசுதர்ஸன நரஸிம்ஹ, மூலவர் விக்ரஹமானது (சுமார் ஒரு டன் எடையும், 4 அடிக்கும் சற்று அதிகமான உயரமும், முழுவதும் கருங்கல்லினால் ஆனது) கோபுரப்பட்டி கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது. விரைவில் ஜலாதி வாஸம் செய்யவுள்ளார்.
Wednesday, August 10, 2022
கோபுரப்பட்டிப் பெருமாள் கோயில் ஸம்ப்ரோக்ஷணை“2022 - 02
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
லீலாசுகர் எழுதிய “கிருஷ்ண கர்ணாம்ருதம்” எனும் அற்புதமான காவியத்தில்,
”க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா
ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா”
”...அம்மா..! விளையாடுவதற்கு வந்த கிருஷ்ணன் மண்ணைப் பட்சணம் போன்று புசிக்கின்றான்..” என்று பலராமன் தாயான யசோதையிடம் கூறுகின்றான். வாயைத் திற்ந்து பார்த்த யசோதைக்கு உலகமே அதில் தெரிந்து மயங்குகிறாள்..!
மண்ணையும் அவன் தின்கிறான் - வெண்ணையையும் அவன்தான் களவாடுகின்றான். அலகிலா விளையாட்டு அவனுடையது.
இது போன்று பாம்பணைத் துறந்து மண்தரையில் பாம்புப் புற்றுகள் சூழ, கோபுரப்பட்டிப் பெருமாள் துயின்றதையும் கண்ணுற்று வருந்தின காலம் சென்று, நம் வருத்தம் தீர்ந்திட இன்று பாம்பணையில் கம்பீரமாகப் பள்ளி கொள்ளும், கண் கொள்ள பாக்கியமும் கிடைக்கப் பெறுகின்றோம்.
இன்னும் கோலகலமாக கோயிலை மாற்றுவோம். நடைபெறவுள்ள திருப்பணியிலும், மஹா ஸம்ப்ரோக்ஷணையிலும் பங்கு கொண்டு, பள்ளி கொண்டானின் பரம அனுக்ரஹத்தினைப் பெறுவோம் வாருங்கள்..!
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே
(6-10-1-)
கோபுரப்பட்டிப் பெருமாள் கோயில் ஸம்ப்ரோக்ஷணை“2022
(ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
கோபுரப்பட்டி - அரங்கன் துயிலும் இன்னொரு அற்புதத் தலம். ஏறத்தாழ எழுநுாறு ஆண்டுகள் கழித்து, கிளர்ந்தெழுந்தத் திருத்தலம். மண்ணும், கல்லும் சிதறிக்கிடந்த நிலை பலகடந்து, மனதிற்கினியனாய் அரங்கன் பள்ளிக்கொண்டு, கண்ணுக்கு விருந்தாய் மாறிய ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய ஊர்..! விண்ணும் மண்ணும் வணங்க, ஆறு நுாற்றாண்டுகள் கடந்து, கட்ந்த 27.08.2010 அன்று சிறப்பாக நடந்தேறிய மஹாஸம்ப்ரோக்ஷணம், தற்சமயம் பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நாம் காண, கண்டு வணங்கி மகிழ மீண்டும் விரைவில் நடைபெறவுள்ளது.! இதற்காக வருகின்ற வைகாசி மாதம் 18ம் நாள், 01-06-2022 அன்று பாலாலயம் நடைபெறவுள்ளது..! இதில் தாங்கள் அனைவரும் பங்குக் கொண்டு, இறையருள் பெறவேண்டி அன்புடன் அழைக்கின்றேன். இத்துடன் நடைபெறவுள்ள திருப்பணிகளுக்கான விவரங்களையும் இணைத்துள்ளோம்..! தாங்களனைவரும் அவசியம் தாங்களால் ஆன உதவிகளை அவசியம் செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றேன். நாமனைவரும் இவ்வரிய கைங்கர்யத்தில் கைகோர்த்து கூடி மகிழந்து கொண்டாடுவோம் வாருங்கள்.! நமஸ்காரம்..!
அன்புடன் - முரளீ பட்டர்
Friday, August 12, 2016
Subscribe to:
Posts (Atom)