Tuesday, June 9, 2009

கோபுரப்பட்டி - 08-06-2009 அன்று

மஹாமண்டபத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துவருகின்றன.
மதிற் சுவர்கள் பிரிக்கப்பட்டு மதிற் திருப்பணி வேலையும் கூடவே
நடந்து வருகின்றது.


கோபுரப்பட்டி - 29 05 09 அன்று

இன்று கோபுரப்பட்டி கோவிலுக்கான மூலஸ்தானம் மேல்பாகம் கற்கள் வந்து சேர்ந்தன.
கற்கள் கிரேன்கள் உதவியுடன் சிற்ப சாஸ்திர பிரகாரம் மூலஸ்தானத்தின் மேற்புறம் மூடப்படுகின்றன.

Wednesday, April 15, 2009

கோபுரப்பட்டி - 13.04.09 அன்று



மூலஸ்தானம், அர்த்த மண்டபம் வேலைகள் ஏறத்தாழ முடியும் தருவாயில் உள்ளது. விமானம், மஹா மண்டபம், கருட மண்டபம், திருமதிள் கட்டுமானம், தாயார் ஸந்நிதி ஆகிய கைங்கர்யங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
உற்சவ விக்ரஹங்கள் வார்ப்பும் விரைவில் நடைபெற உள்ளது. திருமதிள் மொத்தம் 550 அடி நீளமும் 12 அடி உயரமும் உள்ளதாக அமைக்கப்பட உள்ளது. இந்த கைங்கர்யத்திற்காக ஒரு அடி உயரத்திற்கு மதி்ள் சீரமைக்க சுமார் ரூ.4000/- ஆகின்றது. கருட மண்டபம் ஒரு சதுர அடிக்கு ரூ.1250/- செலவு ஆகின்றது.

இந்த அரிய திருப்பணியில. தாங்களோ அல்லது தாங்கள் சிறு சிறு குழுவாகவோ சேர்ந்து தாங்களால் இயன்ற நன்கொடைகளை அனுப்புமாறு பிரார்த்திக்கின்றேன்.

Friday, January 23, 2009

கோபுரப்பட்டி - 21.01.2009 அன்று

ஏறத்தாழ 650 ஆண்டுகளுக்குப் பின் தமது திருமேனியை தம் பக்தர்களுக்காக திருத்திக்கொண்டு பாம்பணை ஸஹிதமாய் தமது ஆஸ்தானம் திரும்பினார் ஸ்ரீரெங்கநாதர். மெய்மறக்கச் செய்தார் கூடிய அனைவரையும்! கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன் ஆனார்!. ஏறத்தாழ 13 மணி நேரம் கோபுரப்பட்டியின் மக்கள் அனைவரையும் அவர்கள் தம் நிலை மறந்து, கவலை துறந்து, தம் கூடவேயிருக்கும்படி ஆட்கொண்டார்!. கோலாகலத்தினால் குதூகலித்தது கோபுரப்பட்டி!.
ஆதிசேஷனை பீடத்தில் எழுந்தருளப்பண்ணும் போது கருடன் வட்டமடித்தப்போது, கோவில் வளாகத்திலுள்ள மக்கள் சிலிர்த்துப் போனார்கள்!. மந்தஹாசனாய் சிரித்தார் அரங்கன்!


Sunday, December 21, 2008

கோபுரப்பட்டி - 20.12.2008 அன்று


21st December' 2008

நான் காண்பது மெய்தானா? என்று சந்தேகப்படும் அளவிற்கு கோபுரப்பட்டியின் மூல விக்ரஹத்தினை செம்மையாக, படுநோ்த்தியாக திருத்தியிருக்கின்றனர் கல் தச்சர்கள். மெய்மறக்கச் செய்தார் மூலவர்.

வரும் 21.01.2009 (தை 8ம் தேதி) ஏகாதசி திதியன்று கோபுரப்பட்டியின் மூலவர், தம் பாம்பணை சஹிதமாய் கோபுரப்பட்டிக்கு, தம் ஆஸ்தான இடத்திற்கு எழுந்தருளவிருக்கின்றார். ஏறத்தாழ 650 வருடங்களுக்குப் பிறகு கோலகலம் கொண்டாடவிருக்கின்றது கோபுரப்பட்டி!



புதுப்பொலிவோடு வரும் இந்த பழமை வாய்ந்த மூலவரை. சிறப்பாக வரவேற்க கோபுரப்பட்டியும் அருகிலுள்ள கிராமங்களும் தயாராகி வருகின்றன. காண்பதற்கு அரிய இந்த மூலவர் புறப்பாட்டினை நாம் மீண்டும் தரிசிக்கவா முடியும்! நீங்களும் தயை கூர்ந்து வாருங்களேன்!

அன்போடு அழைக்கின்றோம் அரங்கன் சார்பில்!
ஆசையோடு எதிர்பார்க்கின்றோம் உங்களனைவரையும்!

Thursday, October 30, 2008

Gopurapatti - Estimate

Donors are invited for the following kainkaryams.

இந்த புனிதமான கைங்கர்யத்தில் தாங்களும்
பங்கு கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்!

Gopurapatti Sri Ranganathar Thirukoil

Estimate of Materials Urgently required

1. 2’ Sized stones 3500 nos. @ Rs.22 Rs. 77,000

2. Ceiling Tiles 1800 nos. @ Rs.10 Rs. 18,000

3. Sand 25 units @ Rs.3000/unit Rs. 75,000

4. Cement 1000 bags @ Rs.260/bag Rs. 2,60,000

5. 1 1/2” Jelly 20 unit @ Rs.2000/unit Rs. 40,000

6. Small stones for filling gaps Rs. 50,000

7. Steel Rods 15 tons @ Rs.50,000/ton Rs. 7,50,000

8. Teakwood Doors 2 nos. Rs.50000/no. Rs. 1,00,000

9. Gomukh and Garbagraha Entrance Stones Rs. 50,000

10. Electrical Expenses Rs. 2,00,000

11. Granite Stones Rs. 3,00,000

Estimate of Buildings

1. Garba-graham (Sanctum Sectorum) Rs.6,00,000


2. Aartha Mandapam Rs.5,00,000


3. Maha-Mandapam Rs.7,00,000


4. Moolasthana Gopuram Rs.8,50,000

The Other Proposals

1. Mahalakshmi Sannidhi Rs. 5,00,000

2. Garuda Mandapam Rs.10,00,000

3. Kitchen Room & Office Room Rs. 2,50,000

4. Miscellaneous Expenses Rs. 2,50,000

Thursday, October 2, 2008

Status on 2nd October'2008

கோவிலின் அஸ்திவாரம் பலமாக அமைக்கப்படுகின்றது.



2nd September 2008

கோவிலிலுள்ள கற்கள் முழுதும் அகற்றப்பட்டு சீராக அடுக்கப்பட்டு விட்டன. அஸ்திவாரமே சுத்தமாகயில்லாமல் கோவில் அமைக்கப்பட்டுள்ளது கண்டு ஆச்சர்யமடைந்தோம். கலாபகாலத்தில் ஏதோ ஒரு அவசரகதியில் கோவில் கட்டியிருப்பார்களோ!
என்று எண்ணத் தோன்றுகிறது.

பழைய நாகப்படுக்கை உபயோகப்படாது என்று ஸ்தபதி அறிவித்தபடியால் அருகில் ஒக்கரை என்ற ஊரில் ஒரு தோ்ந்த கல்தச்சரிடம் ஆதிசேஷபீடம் அமைக்கவும், இந்த பழைய ரெங்கநாதரை பழுது நீக்கி சரிபார்க்கவும் ஒரு சிறுதொகை முன்பணமாக கொடுத்து அவர்கட்கு கிராம சபையாரின் சார்பில் அனுமதியளிக்கப்பட்டது.

சுமார் 6அடிக்கு, கோவில் இருந்த இடத்தைச் சுற்றிலும் பள்ளம் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.