Wednesday, April 15, 2009

K. கோபுரப்பட்டி - 13.04.09 அன்று



மூலஸ்தானம், அர்த்த மண்டபம் வேலைகள் ஏறத்தாழ முடியும் தருவாயில் உள்ளது. விமானம், மஹா மண்டபம், கருட மண்டபம், திருமதிள் கட்டுமானம், தாயார் ஸந்நிதி ஆகிய கைங்கர்யங்கள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
உற்சவ விக்ரஹங்கள் வார்ப்பும் விரைவில் நடைபெற உள்ளது. திருமதிள் மொத்தம் 550 அடி நீளமும் 12 அடி உயரமும் உள்ளதாக அமைக்கப்பட உள்ளது. இந்த கைங்கர்யத்திற்காக ஒரு அடி உயரத்திற்கு மதி்ள் சீரமைக்க சுமார் ரூ.4000/- ஆகின்றது. கருட மண்டபம் ஒரு சதுர அடிக்கு ரூ.1250/- செலவு ஆகின்றது.

இந்த அரிய திருப்பணியில. தாங்களோ அல்லது தாங்கள் சிறு சிறு குழுவாகவோ சேர்ந்து தாங்களால் இயன்ற நன்கொடைகளை அனுப்புமாறு பிரார்த்திக்கின்றேன்.

No comments: