Sunday, April 10, 2011

கோபுரப்பட்டி வளர்ந்த கதை...! வளர்ச்சி-14 10.4.2011

உருப்பட்டூர் திரு. சௌந்திரராஜன் என்பவர் மிக உயர்நத பதவியிலிருந்து
(IRS) ஓய்வு பெற்றவர்.

பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் வைணவததிற்காக அயர்வில்லாது உழைப்பவர்.
இவரது அயர்வில்லா வைணவப்பணிக்கு பின்புலமாகயிருப்பவர் அவரது தர்மபத்தினியாவர்.

இவர் திருவஹிந்திரபுரத்தில் ஸ்ரீஹயக்ரீவருக்காக ஔஷதகிரியில் ஒரு அற்புதமான மண்டபத்தினைக் கட்டியவர். ஸ்ரீஹயக்ரீவ உபாசகர். இவரது வழிகாட்டுதலினால் பயனடைந்தோர் ஏராளமானவர்கள். ஸ்ரீஹயக்ரீவரின் பல்வேறு ஸ்துதிகள் அடங்கிய ”கதம்பமாலா” என்னும் இவரது படைப்பு மிக்க பிரசித்திப்பெற்றது. “சின்ன சின்ன விஷயங்கள்“, “தீட்டு” போன்ற பல உபயோகமான ஆன்மீக படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.

இத்தம்பதிகள் அரங்கனைத் தரிசிக்க வ்ந்திரு்ந்தார்கள். கோபுரப்பட்டியினைக் காண அழைக்கப்பட்டனர். கோபுரப்பட்டியில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை கண்ணுற்றனர்.

என்னுடைய மனதில், ”தாயார் ஸந்நிதிக்காக இப்போது இவரிடம் கேள்” என்று ஒரு
குரல் ஒலி..! இது அரங்கன் ஆணை எனபபுரிந்தது.


”தாயார் ஸந்நிதி கட்டுமானப் பணிகளை தேவரீர் எடுத்து நிறைவேற்றித் தரவேண்டும் ஸ்வாமி..!” என உருப்பட்டூர் ஸ்வாமியிடம் யாசித்தேன்.


அப்போது ஸ்வாமி தற்போதுள்ள மடப்பள்ளியின் மேலுள்ள ஒரு கல்லின் மேல் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவரது மனைவி நின்று கொண்டிருந்தாள்.
இந்த காட்சி இன்னமும் என் மனதில் பசுமையாக புகைப்படம் பிடித்தாற்போன்றுள்ளது.

ஸ்வாமி தன் மனைவியை அண்ணாந்து “ஓப்புக் கொள்ளலாமா..?” என்கிற தோரணையில் நோக்குகின்றார். அவரது மனைவியின் முகத்தில் ஒரு தெய்வீக பரவசம் பரவுகின்றது.
அந்த பரவசத்தில் அவர்கள் அணிந்திருந்த வைரக்கம்மல்கள் ஒரு அதீத ஒளி பரப்பின.

ஸ்வாமியும் இதனை கண்ணுற்றிருப்பார் போலும்..! உடனடியாக ஒப்புக்கொண்டார் ஒரு நிபந்தனையுடன்..!

தாயாரின் விக்ரஹத்தினை ஒரு வார அவகாசத்துடன் தனது கிருஹத்திற்கு எழுந்தருளப் பண்ணி தான் ஆராதனை செய்யவேண்டும் என்று கேட்டார்.

மிக்க மகிழ்வோடு, ஒரு பெரும்பாரம் குறைந்த நிறைவோடு, நானும் ஆடிட்டர் திரு. இராமச்சந்திரனும் ஒப்புக்கொண்டோம்.

தாயார் சில நாட்களுக்குப்பின் சென்னைக்கு அவரது இல்லத்திற்கு பயணித்தாள்..!

No comments: